Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 3: வெள்ளி வெண்ணிலவே
பாகம் 1: கம்புக்கு ஏங்கும் கருப்பு
அத்தியாயம் 3: முன்னுரை
தனக்கு நிச்சயக்கப்பட்ட முறை மாமனையே திருமணத்திற்கு முன் தொட அனுமதிக்காத சியாமளா ரகுவை தீவிரமாக அடைய முயல்வது ரகுவுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் அவன் மனதில் குற்ற உணர்ச்சி மேலோங்கி நிற்கிறது. காரணம் பார்க்கும் பெண்கள் எல்லாருடனும் மையல் கொண்டு கிடைத்த சந்தர்ப்பங்களில் காமம் அனுபவிக்கும் காம பித்தனாகத் தாழ்வு மனப்பான்மை ஏற்பட மனக்குழப்பத்துடன் ரகு. இந்நிலையில்
தொடர்வோம் மூன்றாவது அத்தியாயம்
"நாங்க ஊஞ்சல்ல ஆடாத ஆட்டம் ஆடி, அந்த ஆட்டம் தாங்காத ஊஞ்சல் அறுந்து கடைசீல ரெண்டுப் பேரும் விழுந்து நல்ல வேளை கடவுள் புண்ணியத்தில் லேசான அடியோட தப்பிச்சோம். அந்தச் சங்கடத்ல எங்கிட்ட கோவிச்சிகினு படுத்தவங்கதான் நல்லா தூங்கறங்க. ரொம்ப நேரம் ஆடினது கொஞ்சம் சோர்வா இருந்திருக்கும்னு நினைக்குறேன்."
"ஐய்யா! இந்தச் சின்னம்மா ரொம்ப நல்ல பொன்னுங்க. உங்க ஜோடிப் பொருத்தம் பார்க்க ரொம்ப நல்லா இருக்குங்க. அந்தம்மா யாரையும் கிட்டவே சேத்துகாதுங்க ஆனா உங்கள ரொம்ப புடிச்சிருக்குங்க. இத்தன வருஷ பழக்கத்ல அது இவ்ளோ சந்தோஷமா உங்க மாதிரி வயசு ஆம்பளைங்க கூடப் பழகிப் பார்த்தே இல்லைங்க."
"ரொம்பச் சந்தோஷம் கருத்தம்மா, நீங்க சொல்றது உன்மைதான் அவுங்க ரொம்ப நல்லா பழகுறாங்க. நான் பழகின வரைக்கும் நிச்சயமா அவுங்களுக்கு நல்ல தங்கமான மனசுதான்."
"சரிங்கய்யா நீங்கச் சூடு ஆறிப்போறதுக்குள்ள இந்தப் பஜ்ஜிய சாப்டு காபி குடிங்க சின்னம்மா அப்புறமா சாப்பிடட்டும்; சொல்லி என்னைப் பார்த்து, "சின்னய்யா நான் ஒண்ணு கேட்டா கோவிச்சிக்கமாட்டீங்களே?"
"என்ன கருத்தம்மா ஏதோ பெரிய விஷயமா?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லைங்கய்யா" சொல்லி சியாமளா அறைக்கதவை ஒரு முறை கவனித்து விட்டுப் பின் தலை குனிந்து வெட்கத்துடன், "ஐயா அது வந்து காலைல நான் செஞ்சது ஐய்யாவுக்குப் புடிச்சிதா இல்லையான்னு?" அவள் இப்படி அதிரடியாகக் கேட்பாளென எதிர்பார்க்காத நான் சற்று அதிர்ந்து அவளைப் பேசவேண்டாமென ஜாடையாகச் சொல்ல அவள் தலை குனிந்த வண்ணம் என்னைப் பார்க்காமல் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
அதற்குள் சியாமளா மிக மெதுவாகக் கதவைச் சற்றே திறந்தவள் என்னைப் பார்த்துச் சைகை செய்து என்னை நிறுத்தாமல் தொடரச் சொன்னாள். நான் கருத்தம்மாவைக் கவனிக்க அவ்ளோ சியாமளா அறைக்கு முதுகைக் காட்டிய வண்ணம் வெட்கத்தில் தலை குனிந்தவாறு இருந்தாள்.
"அதுதான் அப்பவே நல்லா இருந்ததுன்னு சொல்லி உங்களுக்கு முத்தம்."
கருத்தம்மா குறுக்கிட்டு, "ஐயா! அதனாலத்தான் வந்து, வந்து நான் இன்னிக்கி ராத்திரி வீட்டுக்கு வரட்டுமா ஐயா." சியாமளா என்னைப் பார்த்து ஒத்துக் கொள்ளும்படி தீவிரமாகச் சைகை செய்தாள்.
எனக்கு ஒரே பதற்றம், குழம்பிய வண்ணமே, "ஐயோ என்ன கருத்தம்மா நீங்க!"
"ஐயா! சும்மா கருப்புன்னு பேரு சொல்லுங்கய்யா இந்த நீங்க வாங்கன்னு ஐயா சொல்லக்கூடாது தயவுசெஞ்சி." மிக உருக்கமாகக் கேட்டுக்கொள்ள
பதற்றத்தில் நான், "ஐய்யோ நான் வளர்ந்த விதம் அப்படி, அவ்ளோ சீக்கிரம் மாத்திக்க முடியாது சரி இருக்கட்டும் இப்ப அது முக்கியமில்லை. நான் அந்த வீட்டுக்கு வந்திருக்குற ஒரு விருந்தாளி நான் அப்படி செய்றது ரொம்பக் கேவலமான விஷயம் கருப்பு; வேணாம் இப்படி செய்து மாட்டிக்கிட்டா மானம் போயி அத்தோட நான் உயிரோட!"
அவள் விரைந்து பதட்டத்துடன் குறுக்கிட்டு, "ஐய்யோ இதுக்குப் போயி பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு வேணாங்கய்யா ஆனால்... ஆனால் அந்த வீட்ல ராத்திரி பத்து மணிக்கு மேல மொட்டை மாடிக்கு யாரும் வரமாட்டாங்க அதனால யாரும் பார்க்க மாட்டாங்க. என்னை நம்புங்க (சற்றே ரகசியமாக குரலைத் தாழ்த்தி) நான் எத்தனையோ முறை பெரிய ஐய்யாவுக்காக,"
அவள் சொல்லப் போவது வேண்டாத சர்ச்சைகளை ஏற்படுத்துவது நிச்சயம் என உணர்ந்து நான் அதிரடியாக அந்தச் சம்பாஷினையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நிர்பந்தத்தில் நான், "அட சியாமளா எழுந்திட்டீங்களா வாங்க வாங்க. கருத்தம்மா இப்பத்தான் வந்தாங்க, உங்களுக்காகப் பஜ்ஜி கொண்டாந்திருக்காங்க சாப்பிடுங்க."
சியாமளா, "என்ன கருப்பு ஏதோ எங்க அப்பாவுக்காக-ன்னு சொல்லிக்கிட்டிருந்தே! என்ன விஷயம்?"
ஏதேதோ சொல்லி சமாளித்த கருப்பு, "சின்னம்மா யாரும்மா அந்தத் தண்ணிக் கால்வாயில வேலை செஞ்சது?"
நான், "சரி நீங்க பேசிக்கிட்டே இருங்க நான் போய் அந்தப் பிஞ்சிப்போன ஊஞ்சல கழட்டிப் போட்டுட்டு வறேன்." என்னைப் பின் தொடர்ந்த கருத்தம்மாவை, "அட என்ன கருத்தம்மா? சியாமளாவுக்குக் கேக்கறாமதிரி இப்படிப் பேசி மாட்டி விட்டுட்டுடீங்க."
"மன்னிச்சிக்கோங்க ஐய்யா நான் ஒரு புத்தி கெட்டவ. அப்புறம் ஐய்யா உங்களுக்குப் புடிச்சிருந்தா நான் ராத்திரிக்கு உங்க வீட்டுக்கு வரட்டுமா ஐய்யா. என் மேல சத்தியமா சொல்றேன் அந்த மொட்டை மாடிக்கு பத்து மணிக்கு மேல யாரும் வரமாட்டாங்க அது பெரிய ஐய்யா உத்தரவுங்க. அதுக்கும் மேல அங்க பேய் பிசாசு ஒலாத்தறதா கட்டுக்கதை கிளப்பி வெச்சிருக்குறாரு. இதை யாருகிட்டயும் சொல்லிடாதீங்க. அது நாங்க வந்து பெரிய ஐய்யாவை சந்தோஷப்படுத்துறதுக்குச் செய்திருக்குற ஏற்பாடுங்க; அது அந்த வீட்டுல இருக்குற யாருக்கும் தெரியாதுங்க."
குறுக்கிட்ட நான், "அட இதென்ன புதுக்கதை! கொஞ்சம் விவரமாச் சொல்லு."
"அது வந்துங்க பெரிய ஐய்யா சொல்றப்ப நாங்க... நாங்கன்னா என்ன மாதிரி இன்னும் ரெண்டு மூனு பேருங்க, பெரிய ஐய்யா சொன்னா வந்து அவரோ இல்ல அவருக்குத் தெரிஞ்சவங்க. ஊர் பெரிய மனுஷங்க, பெரிய ஆபீசருங்க. உங்க.... (சற்றுத் தயங்கியவள்) நீங்க யாருகிட்டையும் சொல்ல மாட்டீங்கன்னா உங்க.... உங்க (சொல்லி சற்று பொறுக்க)
"பரவாயில்ல சொல்லுங்க நான் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்."
"வந்து உங்க சித்தப்பாவும் அப்ப அப்ப வருவாருங்க. ஐயா நாங்க அடிமைங்க அவங்களக் குஷிப்படுத்துறதுக்கு அவுங்க என்ன சொன்னாலும் நாங்க செய்வோங்க. ஆனா நீங்க காலைல நான் செய்த சின்ன வேலைக்கு அவ்ளோ பெரிய விஷயம்லாம் செய்தீங்க (சொல்லி சற்றுத் தயங்கி) எனக்குத் தெரிஞ்சி என் வாழ்க்கையில அவ்ளோ அன்பா ஆசையா முத்தம் குடுத்த ஒரே மவராசன் நீங்கதான் ஐய்யா. வெக்கத்த விட்டு சொல்றேங்க ஐய்யா எனக்குக் காலைலேந்து கையும் ஓடல காலும் ஓடல."
நான் குறுக்கிட்டு, "ஐயோ உங்க மனசுல இவ்ளோ சங்கடப்படச் செய்ததுக்கு எனக்கு வருத்தமா இருக்கு. சரி நான் இன்னும் இங்கே ஒரு வாரம் இருக்கப்போறேன். நான் திரும்பிப் போறதுக்குள்ள ஒரு முறையாச்சம் உங்க ஆசையப் நிறைவேத்துவேன் என்னை நம்புங்க. ஆனால் அந்த வீடு அவ்ளோ நல்ல இடமா எனக்குப் படல." அதற்குள் சியாமளா அருகில் வர நான் அங்கு இரவில் வருவதாக இருந்தால் ஏதாவது பிரச்சினை வருமா என நேரிடையாக கேட்காமல் மறைமுகமாக, "ஆமாம் கருத்தம்மா நீங்க ஒரே ஆளு ராத்திரி இங்க தனியா காவலுக்கு இருக்குறீங்களே உங்களுக்குப் பயமில்ல, துணைக்கு வேற யாரையாவது."
"அட இங்க யாரும் வரமாட்டாங்க, நான் இங்க சின்னப் புள்ளயா இருந்து வளந்தவ. எனக்கு இங்க இருக்கப் பயமா? நல்ல கேள்வி கேட்டிங்க. இங்க கண்ணுக்கெட்டின தூரத்ல இருக்குற நிலமெல்லாம் நம்ம ஐயா நிலம்."
"ஆளுங்க பயமில்லைன்னா பரவாயில்ல இந்தப் பேய் பிசாசு பயமெல்லாம் உங்களுக்கு இல்லையா?"
"அதெல்லாம் எனக்கில்லைங்க ஐயா."
அத்துடன் அவளிடம் விடை பெற்று வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றோம்.
வீடு திரும்பும் வழியில் சியாமளா, "ரகு நாளைக்கும் பண்ணைக்கு உங்க கூட நான் தானே!"
"என்ன சியாமு என்னைக் கேக்கறீங்க. நான் தான் கேக்கனும் நாளைக்கு என்னை யார் கூட்டிக்கிட்டு வரப்போறதுன்னு."
சியாமளா, "நீங்க என் கூடப்போறேன்னு எங்க சித்திய கேளுங்க." அவள் மனதில் அலைமோதிய ஆசைகளை நினைத்து உள்ளம் பூரித்தன.
அவளை அணைக்கத் துடிக்க மனதைக் கட்டுப்படுத்தி அவள் கையைச் சற்றே அழுந்த பிடித்துவாறு உணர்ச்சியை அடக்கி, "என்னன்னு கேக்குறது, நான் இந்த அழகிய இளந்தேவதைய கூட்டிக்கிட்டுத் தனியா பண்ணைக்குப் போகட்டுமான்னு கேக்கனும்மா?"
என் கேள்வியின் அர்த்தம் புரிந்தவள் சற்று யோசித்து, "நீங்க யோசிச்சி எப்டியாச்சம் இன்னிக்கு மாதிரியே நாளைக்கும் நம்ம ரெண்டு பேரும் வர வழிப்பண்ணுங்க ப்ளீஸ்!" சின்னக் குழந்தை அடம் பிடிப்பதைப் போல என் இடது கையையைத் தன் இரு கைகளால் கட்டிக்கொண்டு சிணுங்கலாகக் கெஞ்சினாள். நான் சுற்றும் முற்றும் பார்க்க சற்றே விலகி அவளும் பார்த்துவிட்டு யாரும் இல்லையென உறுதி செய்து மீண்டும் நன்றாகக் கட்டிக்கொண்டு, "ப்லீஸ்! ப்லீஸ்! நீங்க நல்லா யோசிச்சீங்கன்ன நிச்சயமா ஒரு நல்ல வழி கண்டு பிடிப்பீங்க."
"என் மேல உங்களுக்கு இருக்குற நம்பிக்கைக்கு நன்றி. ரெண்டு பேரும் நல்லா யோசிக்கலாம். ஆனால் ரொம்ப முக்கியமா நம்ம ரெண்டு பேரும் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும். முக்கியமா நீங்க, எந்த வித்தியாசமும் காட்டிக்காம வழக்கமா இருக்குறா மாதிரி இருக்கனும். அவங்களுக்குச் சந்தேகம் வராத மாதிரி. பார்க்கலாம் ஏதாவது ஒரு நல்ல திட்டம் செய்யலாம், அப்புறம் எந்த யோசனையையும் எங்கிட்ட சொல்லிட்டுச் செய்ங்க." சரி என்று தலையாட்டிக் கொண்டாள். வீட்டை அடைந்ததும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருக்க. சியாமளா மிக உற்சாகமாக மகிழ்ச்சியாக இருப்பதை நோட்டமிட்டனர் அத்தையும் சித்தியும்.
ஷீலா, "என்ன தம்பு என்ன செய்த சியாமளாவ. இவ்ளோ சந்தோஷமா நாங்க அவளைப் பார்த்ததே இல்லப்பா." அத்தை ஏதோ என்னைக் கேலியாக இரட்டை அர்த்தமாக கேட்பதாக தோன்றியது எனக்கு.
ஷீலா, "என்ன தம்பு என்ன செய்த சியாமளாவ; இவ்ளோ சந்தோஷமா நாங்க அவளைப் பார்த்ததே இல்லப்பா." அத்தை ஏதோ என்னைக் கேலியாக இரட்டை அர்த்தமாக கேட்பதாக தோன்றயது.
நானும் இரட்டை அர்த்தத்தில், "அதுதான் எனக்கும் புரியாத புதிர்; நேத்து நீங்க என்னோட பேசி அரட்டை அடிச்சதுல அவ்ளோ சந்தோஷமா இருந்தீங்க அதே மாதிரி இன்னிக்கி சியாமளா... அடுத்து அட எங்கே இன்னொரு அக்கா பானு ஆள் கண்ணுலயே படல?"
சியாமளா, "அதுதானே எங்கே பானு ஆளையே காணோம்!"
ஷீலா, "என்னமோ மத்தியானத்திலேர்ந்து அவள் முகமே சரியில்லமா ஆளு மந்தமா இருந்தா என்னன்னு கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்டேங்குறா. மத்தியானம் போய் படுத்தவ இன்னும் எழுந்துக்கவே இல்ல நானும் அத்தோட மறந்துட்டேன்." சொல்லித் தேடிப் போனவர்கள் சற்று நேரத்தில்... ஏதோ பிரச்சினை என தோன்றியது.
சியாமளா, "அட இதுக்குப் போய் அழுவங்களா? எழுந்திரு பானு, காபி குடிச்சியா? இரு நான் போட்டுக் கொண்டுவறேன்." சொல்லி விரைந்தாள் சியாமளா அதற்குள் அத்தை சென்று ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். நானும் என் சித்தியும் ஒருவரையொருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு பின் இருவரும் சென்று என்ன என்று விசாரிக்க.
அத்தை என்னைத் தடுத்து, "நீ இப்டி வா தம்பு, அது பொம்பளைங்க சமாச்சாரம்." சொல்லி என்னை அவர்களை அணுக விடாமல் தடுத்து மீண்டும் பழைய இடத்திற்கே அழைத்து வந்தார்.
சியாமளா, "சித்தி இங்க கொஞ்சம் வா, அது முடியலன்னு அழுவுது." அத்தை திரும்ப சென்று பேசினார். நான் என் சித்தியை அழைத்து விவரம் கேட்க
என் சித்தி, "அது பொம்பளைங்க விஷயம்டா உனக்குச் சொன்னா புரியாது அது அப்டிதான் நீ கண்டுக்காம விடுடா."
எனக்கு மன வருத்தம், "சரி அவங்களுக்கு முடியலைன்னா மருத்துவர் கிட்ட போகலாமே!"
என் சித்தி, "இதெல்லாம் சிலருக்கு அப்டிதான் இதுக்கு மருந்தெல்லாம் கிடையாது."
அதேசமயம் அத்தை சற்றே எரிச்சலடைந்து சத்தமாக, "சும்மா அழுதுகிட்டிருந்தா சரியாப் போயிடுமா? எவ்ளோ நேரமா நான் சொல்லிக்கிட்டு இருக்கேன், டாக்டர் கிட்டயும் வரமாட்டாளாம் இப்டியே அழுதுகிட்டே இருப்பாளாம்."
நான் நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை எனப் புரிந்து அங்கு சென்று, "ஐய்யோ அத்தை பாவம் அவுங்களே கஷ்டப்படாறங்க இதுல நீங்க வேற சத்தமா திட்டறீங்க, கொஞ்சம் இப்டி வாங்க." சொல்லி அத்தையை அழைத்து அங்கிருந்து வெளியேற்றி விட்டு, "என்ன சியாமளா அவுங்களுக்கு என்ன பிரச்சினை?" கேட்டுக் கொண்டே அவர்களை அணுக பானு ஏதோ சைகை செய்தாள்.
சியாமளா, "அது கூச்சப்படுது, நீங்க கிட்ட வர வேண்டாமுன்னு."
நான் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றேன், பின் சியாமளாவை தனியே அழைத்துப் பேசியதில் பானுவுக்கு இந்த பிரச்சினை அவ்வப்போது ஏற்படுவதாகவும், ஆனால் அவள் எத்தனை முறை வற்புறுத்தியும் மருத்துவரிடம் செல்ல மறுத்து தவிர்ப்பதாகவும் தெரிந்தது. எனக்கு சற்று புரிய ஆரம்பித்தது.
தொடரும்