Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 3: வெள்ளி வெண்ணிலவே
பாகம் 4: குறும்பு விகடம் விளையாட்டு
உடனே நான் குறும்பாக 'இயற்கையான ஆடையே என் விருப்பேர்ப்பு' எனக் கேலியாகச் சொல்ல; இயற்கையான ஆடையா அது என்ன என அனிதா கேட்க; நான் மேலும் மறைமுகமாக விளக்கும் விதமாக அவள் இயற்கையாகப் பிறந்ததும் அவள் அம்மா அளித்த ஆடை அதாவது நிர்வாணம் எனச் சுட்டினேன்.
சிரித்தவண்ணம் அனிதா, "I know I know what you guys will prefer; see mom I told you!"
நான் பதற்றத்துடன் உடனடியாகக் குறுக்கிட்டு 'என்ன உன் அம்மா இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறாரா?' என அதிர்ந்து மிக உருக்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். உடனே குறுக்கிட்ட அனிதா என்னைப் பயப்பட வேண்டாமென அறிவுறுத்தி அவள் அம்மா அந்த உரையாடலைக் கேட்கவில்லை எனவும் என்னைச் சீண்டி விளையாடவே அப்படிச் செய்ததாகவும் குறிப்பிட்டாள்.
அதே சமயம் மற்றவர்கள் முன்னிலையில் நான் எப்படி இப்படி ஆபாசமாகப் பேச முடிகிறது என வியப்பதாகத் தெரிவித்தாள். அந்த வீட்டில் மற்ற யாருக்கும் ஆங்கிலம் தெரியாது அதனால் நான் பேசும் எதுவும் அவர்களுக்குப் புரியாது அதனால்தான் என்னால் பேசமுடிகிறதெனத் தெரிவித்தேன்.
பின்னர் அனிதா அவள் அம்மா தன் ஆடை விஷயத்தில் சற்று கவலை கொள்வதாகவும் ஏற்கனவே முதல் நாள் தான் அறிமுகம் செய்து கொண்ட போது சொதப்பிவிட்டதையும் நினைவு கூர்ந்து மீண்டும் அப்படி ஏற்படாமல் அக்கரை கொள்வதாகக் கூறினாள்.
அதற்கு நான் அந்த இடத்தின் அந்தரங்கத் தனிமை (privacy) நிலையை விளக்க; அது ஒரு மிகப்பெரிய வயல் வெளிக்கு நடுவே பாதுகாப்பான பண்ணைத்தோட்டம். அங்கு வேலை செய்யும் ஆட்களைத் தவிர வேறு யாரும் அண்ட முடியாத தனிமை.
அதற்கும் மேல் அங்குத் தற்போது வேலை ஆட்களும் இல்லை. வெளி ஆட்கள் யாரும் வரமாட்டார்கள் அங்கு இருக்கப்போகும் ஒரே ஆண் நான் மட்டும் தான் எனவே அப்படி ஒரு சிறப்பான தனிமை பெரும் பாக்கியம் என விளக்கினேன்.
அதைக்கேட்ட அனிதா மிகவும் மகிழ்ந்து நாளைய சந்திப்பை ஆவலுடன் எதிர் நோக்குவதாகத் தெரிவித்து விடைபெற்றாள். பின்னர் நான் அவள் அம்மாவிடம் பானுவின் சிகிச்சையைப்பற்றிச் சில சந்தேகங்களைக் கேட்க விரும்பி அவரிடம் பேசினேன்.
நான், "பானுவுக்கு கொடுத்திருக்கிற வலி நிவாரணி எவ்ளோ சக்தி வாய்ந்ததுன்னு தெரியல. ஒரு வேலை அந்த நிவாரணி மருந்து (மாத்திரை) எடுத்துக்கிட்ட பிறகும் வலி இருந்தால் வேறு மாற்று நிவாரணமா... உதாரணமா வெப்ப/குளிர் ஒத்தடம் கொடுக்கலாமான்னு கேட்க மறந்துட்டேன்."
ஜெயா, "அட நல்ல யோசனை; நானே சொல்லி இருக்கனும் மறந்துட்டேன். தாராளமா செய்யலாம் அது ஒண்ணும் தவறில்லை." என விளக்கினார்.
பேசி முடித்து நன்றி சொல்லி விடை பெற்றதும் காத்திருந்தவளாக உடனடியாக கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் பானு, "வலியில துடிக்கிற நானே கேட்க மறந்துட்டேன். என் செல்லம் எவ்ளோ பொறுப்பாக கவனிச்சுக்குற. உன் கூடப்பிறந்தவங்க அப்புறம் உன்னை கட்டிக்கப்போறவ கொடுத்து வெச்சவ."
அவள் முடித்ததும் ஷீலா அத்தை வரிசையில் நின்றவராக குறுகுறுவென்ற பார்வையோட நிற்க புரிந்த நான் உடனே தடாலடியாக மண்டியிட்டு, "ஐய்யொ அத்தை மன்னிச்சிடுங்க சும்மா விளையாட்டுக்கு."
செல்ல கோபத்துடன் என் காதைப் பிடித்து என்னை எழுப்பிய ஷீலா, "ச்சீச்சீ எழுந்திரு கழுத; ஆம்பளை புள்ள இப்படித்தான் பொம்பள கிட்ட... (மற்றவர்களை நோக்கி) சரியான திருடுமா இது செய்யுறதெல்லாம் செய்திட்டு தடால்னு இப்படி கால்ல விழுந்து சமாளிச்சிடுது." சொல்லி என்னை கட்டிக்கொண்டு கொஞ்சினார்.
லஷ்மி, "இப்போ என்னா சேட்டை செய்து இப்படி கால்ல விழுந்து நாடகம் ஆடி அத்தையும் மருமகனும் ஒட்டிக்கிட்டாங்க. என்ன நடக்குதுன்னே தெரியமாட்டேங்குதே!" குழம்பிய புன்னகையுடன் வினவ, அதே நிலையில் பானுவும் சியாமளாவும் நோக்கினர்.
ஷீலா, "அந்த கூத்தை ஏன் கேட்குற சுத்த வெவறங்கெட்ட மண்டுங்க நாம எல்லாம்னு சும்மா ஜம்முன்னு ஏமாத்தி கலாட்டா செய்யுது தம்பி. அது டாக்டருக்கு போன் செய்யவே இல்லை. சும்மா போன் செய்தாமாதிரி ஏமாத்தி நாம பயந்து எல்லா உண்மையும் உலறிட்டோம்."
இதைக்கேட்டதும் அனைவரும் ஆச்சரியத்தில் வியந்தனர்.
லஷ்மி, "அடப்பாவி உன் மெல இவ்ளோ ஆசையா இருக்குற அத்தயையா இப்படி ஏமாத்துறது."
ஷீலா, "அட நாம தம்பி கிட்ட விளைடி ஏமாத்தினோம் அதுக்கு அது விளையாட்டுக்கு திரும்ப விளையாடி சரியா திருப்பி கொடுத்துடுச்சி."
லஷ்மி, "சரி அது போகட்டும், டாக்டர் ஏன் இப்போ போன் செய்தாங்க?"
நான் அந்த சிரிப்பு நாடகத்தின் தொடர்ச்சியாக கடி ஜோக்காக, "அவுங்க வீட்ல போன் இருக்கு செய்யுறாங்க."
க்குளுக்கென அனைவரும் அனிச்சையாக சிரிக்க என் சித்தியும் சிரிப்பு கலந்த கோபத்துடன், "பார்த்தீங்களாம்மா அவன் சாமர்த்தியத்தை; இல்லை இல்லை அவனுக்கு ரொம்ப கொழுப்பு ஏறிப்போச்சி ஒத வாங்காம அந்த கொழுப்பு அடங்காது. எம்மா யாருன்னா ஒரு கொம்பைக் குடுங்கம்மா அவன் தோலை உரிச்சாத்தான் வழிக்கு வருவான்."
அங்குமிங்கும் தேடி அருகில் இருந்த ஒரு அடி மர அளவுகோலை (Scale) குனிந்து எடுக்க; உடனே பானுவும் சியாமளாவும் ஓடி வந்து என் சித்தியைத் தடுத்தனர். "அக்கா என்ன இது ஆம்பளப் புள்ளயப் போய் கை நீட்டுறதே தப்பு அதுலையும் தோளுக்கு மேல வளந்த புள்ளயப் போய்; சும்மா போக்கா (போ அக்கா)." என பொரிந்தாள் பானு.
சியாமளா, "அக்கா நீ செய்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை. இப்படி தான் ஆம்பள மேல கை நீட்டு வாங்களா? (ஷீலாவை நோக்கி) ஐய்ய! எப்படி சிரிச்சிகிட்டு வேடிக்கை பார்த்து கிட்டிருக்குப் பாரு இந்த சித்தி. உங்களை எல்லாம் கேக்கறதுக்கு ஆளில்லாமப் போச்சி."
ஆச்சர்ய, அதிர்ச்சியின் வெளிப்பாடாக தன் கையை வாயில் வைத்து மூடி ஷீலா, "லஷ்மி பார்த்தியா ரெண்டும் எப்படி வரிஞ்சி கட்டிக்கினு சண்டைக்கு வருதுன்னு."
மீண்டும் என் சித்தி சிரித்துக் கொண்டே, "இதோ வரேன் முதல்ல உங்க ரெண்டு பெருக்கும் ஒத குடுக்கனும். ஒரு கேள்வி கேட்டா உருப்படியான பதில சொல்லாம."
நான் சிரித்துக் கொண்டே, "பொய்."
என் சித்தி, "இன்னாடா பொய்?"
"நீங்க கேட்டக் கேள்விக்கு நான் சரியான பதிலத்தான் சொன்னேன்."
சியாமளா என்னை நோக்கி, "அட நீங்க வேற அக்காவை கேலி செய்தது போதும் விஷயத்தை தெளிவா சொல்லுங்க."
"கேட்ட கேள்விக்கு சரியான பதிலை சொன்னா தப்பா? வேணும்னா நீங்க கேளுங்க நான் சரியா பதில் சொல்றனான்னு பாருங்க."
அவள் சிறிது யோசித்து பின், "டாக்டர் எதுக்கு உங்களுக்கு போன் பண்ணாங்க?"
"அவுங்களுக்கு என் கூட பேச ஆசை."
சியாமளா, "ஐய்யொ எப்பா நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு ஆள விடுங்க சாமி."
என் சித்தி ஏதோ பேசத் தொடங்க பானு இடை மறித்து, "கொஞ்சம் இருக்கா நான் கேக்குறேன், என என்னை நோக்கி, "டாக்டர் உங்ககிட்ட என்ன விஷயம் பேசினாங்க?"
"சபாஷ் இது சரியான கேள்வி, பேசாமடந்தை பேசினால் நல்லா இருக்கு." நான் பாராட்டினேன்.
சியாமளா, "போதும் போதும், பதிலச் சொல்லுங்க."
"அது ஒண்ணும் இல்ல அவுங்க பொன்னு என் கிட்டப் பேச ஆசைப் படுதுன்னு சொன்னாங்க."
பானு, "சரி அந்தப் பொன்னு என்ன விஷயமா பேசினாங்க."
நான், "அது நாங்க சின்னஞ்சிருசுங்க தமாஷா பேசிக்கறதெல்லாம் வெளிய சொல்லலாமா!"
லஷ்மி, "அடடடடா ரெண்டு நாள் பழக்கம் அதுக்குள்ள என்ன பேசிக்கிட்டீங்க?"
நான் உடனே ஒரு அப்பாவி/அசட்டுச் சிறுவன் வெட்கப்பட்டுப் பேசுவதைப் போல அப்பட்டமாக நடிக்கத் திட்டமிட்டு, பானுவை அணுகி அவள் வலது கையைப் பிடித்து அதன் விரல்களை என் இரு கைகளாலும் லேசாக வருடிக் கோலம் போட்டவாறு,
"அது வந்துக்கா அந்தப் பொன்னுக்கு நாளைக்கு கிணத்துல குளிக்கறப்ப இன்னா ட்ரஸ் (உடை) போட்டுக்குறதுன்னு குழப்பமா இருக்காம் அதுக்கு... அதுக்கு என்னை யோசனை கேட்டுதுக்கா." சொல்லி அசட்டுத்தனமாக சிரித்தேன்.
அதைக்கேட்டதும் பானுவுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வர அடக்கியவாறு, "சரி நீ என்ன சொன்ன?"
நான், "ஐய்யோ போக்கா (போ அக்கா) எனக்கு வெக்கம் வெக்கமா வருது." சொல்லி முகத்தை என் கைகளால் மூட அத்தை, சியாமளா மற்றும் என் சித்தி மூவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு என் அருகில் வந்து மிகுந்த ஆவலாய் என் பதிலை எதிர் நோக்க.
லஷ்மி, "லூசுப்பையா சொல்லுடா."
"நான் கேட்டேன் 'அட உங்க ஊர்ல குளிக்கறப்போ ட்ரஸ் போட்டாக் குளிப்பீங்க! எங்க ஊர்ல நாங்க ட்ரஸ்ஸை அவுத்துட்டுத்தான் குளிப்போம்'-னு சொன்னேன்."
அவ்வளவுதான் அந்த நான்குப் பெண்களுக்கும் சிரிப்பு வெடித்து அடக்க முடியாமல் சிரித்து சிரித்து மூச்சு வாங்கி, நிற்க முடியாமல் தரையில் அமர்ந்து, உருண்டு கண்களில் கண்ணீர் வரும் அளவுக்கு சிரித்து ஒய்ந்தனர்.
அத்தையும் பானுவும் என் மீது சாய்ந்து கட்டிக் கொண்டு சிரித்தனர். அப்படியே அத்தை என் மடியில் படுத்து, "அப்பா என்னால முடியலப்பா எனக்கு மூச்சு வாங்குது. நான் அப்டியே கொஞ்ச நேரம் படுத்துக்கறேன், என்னால பேசக்கூட முடியல."
நால்வரும் அதே நிலையில் கிட்டத்தட்ட ஐந்தாறு நிமிடங்களுக்கு சிரித்து ஓய்ந்தனர்.
பின்னர் லஷ்மி, "இப்பவாச்சும் சொல்லுடா என்,"
உடனடியாக என் சித்தி வாயை பாய்ந்து மூடிய அத்தை தீர்க்கமாக, "அம்மா தாயே என்னால முடியாதும்மா! தயவுசெஞ்சி என் பேச்சக் கேளு. இன்னும் ஒரு மணி நேரத்துக்கு அதைப்பத்தி பேசாதே. நாங்க கொஞ்சம் நிம்மதியா தூங்கனும். அப்புறம் அந்த கச்சேரிய அம்மாவும் புள்ளையும் வெச்சிக்கோங்க எங்களை விடுங்கப்பா சாமி, எனக்கு இப்பவே வயிறு வலிக்குது."
அடுத்த அரை மணி நேரத்திற்கு தொடர்ந்து இடையிடையே ஒருவர் மாறி ஒருவர் நினைத்து நினைத்து சிரிப்பு வந்து அடக்கிக் கொண்டனர். அவர்களால் அந்த சிரிப்பின் நினப்பிலிருந்து வெளிவர முடியாமல் தவித்தனர். அவர்கள் மனநிலையை மாற்ற வேறு ஏதாவது தலைப்பு மாற வேண்டிய அவசியம் உணர்ந்து, "சரி நாளைக்கு என்ன திட்டம்?" எனக் கேள்வி எழுப்பினேன்.
லஷ்மி, "நான் பாப்பாவைக் கூட்டிக்கிட்டு பழைய நண்பர்கள் வீட்டுக்குப் போகனும்; நான் ஏற்கனவே செய்த ஏற்பாடு." என திட்டவட்டமாகக் கூறி முடித்தார்.
ஷீலா, "லஷ்மி ஏற்கனவே சொல்லி வெச்சிருக்கு அத மாத்த முடியாது. ஆனால் டாக்டர் திடீர்ன்னு பண்ணைக்கு வரேன்னு சொல்லிட்டாங்க. சரி வேற வழியில்லை; நாங்க அவுங்களை பார்த்துக்குறோம் நீ போய்ட்டு வா லஷ்மி இன்னொரு நாள் பார்த்துக்கலாம்."
சற்று நேரத்தில் நான் நேற்றைப் போலவே காற்று வாங்கியபடி நடைப் பயிற்சி செய்ய விரும்பி ஆயத்தமானேன். இன்று என்னுடன் யாரும் வரமுடியாத நிலையில் நான் தனியாகச் செல்ல நேரிட்டது.
உடனடியாக அந்தத் தனிமையை எனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அப்பொழுதே கருத்தம்மாவின் ஆசையை நிறைவேற்றத் தகுந்த தருணமாகப் பண்ணைக்குச் செல்ல திட்டமிட்டு விரைவாகச் சென்று வரச் சைக்கிள் உகந்ததாகத் தோன்றியது. நடைப் பயிற்சியைச் சைக்கிள் பயிற்சியாகக் கூறி அத்தையிடம் சொல்லி சைக்கிள் சவாரியாக புறப்பட்டேன்.
ஷீலா, "நீ வந்த பிறகுதான் எனக்குத் தூக்கம் வரும்; பத்திரமா சீக்கிரம் வந்துடனும்."
ஒப்புக்கொண்டு சாவியை வாங்கிக் கொண்டு சிட்டாகப் பறந்தேன். பண்ணையை அடைய அங்கு ஆள் இருப்பதற்கான அறிகுறிகளின்றி நிசப்தமாக இருந்தது. ஒரு வேளை அவள் உறங்கி இருப்பாளோ? மிதிவண்டியைச் சற்றே தள்ளி பக்கத்தில் ஒரு மறைவிடத்தில் மறைத்து வைத்துவிட்டு அருகிலிருந்த ஒரு மரத்தின் உதவியுடன் பண்ணைக்குள் குதித்தேன்.
பின் மெல்லப் பண்ணை வீட்டை அடைந்து கதவைத் தட்ட நினைக்கையில் சற்றே யோசித்து அவள் தைரியத்தைச் சோதிக்க பயமுறுத்தி விளையாட முடிவு செய்தேன். அந்தப் பண்ணை வீடு ஒரு பதினைந்து அடி அகலமும் நாற்பது அடி நீளமும் கொண்ட மொட்டை மாடி போன்ற சமதளமான கூரை.
ஒரு பெரிய செங்கல்லையும் ஒரு ஆறு அடி நீண்ட மூங்கில் கோலையும் எடுத்துக் கொண்டு அந்தக் கூரையின் மீது சத்தமின்றி ஏறி பின் மெதுவாக அந்த வாயிற்கதவுக்கு மேல் கூரையிலிருந்து படுத்தவாறு அந்த மூங்கில் கோலைக் கொண்டு கதவுத் தாழ்ப்பாள் மீது இரண்டு மூன்று முறை இடித்து யாரோ கதவைத் தட்டுவதைப் போன்று செய்தேன்.
சிறிது நேரம் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டைத் தொடர்ந்தவாறே அவளைச் சற்றே பண்ணை வீட்டை விட்டி விலகிச் செல்ல வைத்துச் சரியான சந்தர்ப்பத்தில் அவள் அறியாத வண்ணம் பண்ணை வீட்டுக்குள் புகுந்து மறைந்திருந்தேன். சில நிமிட தேடலுக்குப்பின் பண்ணை வீட்டுக்குள் நுழைந்தவளை அதிரடியாகச் சுற்றி வளைத்தேன்.
அவள் நுழைந்ததும் வலது கையிலிருந்த அரிவாளை இடது கைக்கு மாற்றிக் கதவைச் சாத்தி வலது கையால் தாழ் போட்டவளை அதிரடியாக அவள் இடது கையிலிருந்த அரிவாளோடு சேர்த்து மடக்கிப்பிடித்தேன். என் வலது கையால் அவள் வாயைப் பொத்தி அவளை முழுவதும் அசையவிடாமல் சிறை செய்தேன்.
உடனடியாக அவள் தன் வலது கையால் என்னிடமிருந்து அரிவாளைப் பிடுங்க முழுப் பலத்துடன் போராடியவள் ஒரு சில நிமிடத்தில் தன் போராட்டத்தைக் கைவிட்டு தன் வலது கையால் என் கை மற்றும் மற்ற உடல் பகுதிகளைத் தொட்டு உணர ஆரம்பித்தாள்; தொடர்ந்து தன் போராட்டத்தை முழுவதும் கைவிட்டு ஏதோ பேச ஆரம்பித்தாள்.
நான் அவள் வாயை விடுவிக்க, "அட என்ன சின்னய்யா? இந்நேரத்துல," என குழம்பினாள்.
நான் அதிர்ந்து அவளை முழுமையாக விடுவித்து, "அட எப்படி என்னைக் கண்டுபிடிச்ச கருப்பு?"
"உங்க மேல அடிக்கிற கமகம வாசனை இங்க யாரு மேலையும் இல்ல அது சுலபமா காட்டிக் குடுத்துச்சி அப்புறம் உங்க கை உடம்பத் தொட்டதும் நிச்சயமா தெரிஞ்சி போச்சி; அது இருக்கட்டும் ஐயா என்ன விஷயம் ஐயா இந்த நேரத்ல இங்க வந்து என்னை இப்படி பயமுருத்திட்டீங்க!"
"சும்மா விளையாட்டா; நீ எப்படி காவல் செய்றன்னு சோதிச்சி பாக்க வந்தேன்."
தொடரும்