Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு
அத்தியாயம் நான்கு முன்னுரை:
அடுத்தகட்டமாக நாயகன் தன் சித்தப்பா மற்றும் ஜமீன் மாமா அவர்களின் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தன் புத்திசாலித்தனத்தால் திறம்படக் கையாள முயல; கிணறு தோண்டப் பூதம் கிளம்ப அதை நாயகன் எப்படித் தீர்க்கப்போகிறான்; கதைக்களம் சற்று வாழ்க்கைச் சூழல் சவாலைக் கையாளும் போக்கில் திசை திரும்பும்; ஆனால் காமத்தை விட்டு முழுமையாக விலகாது. எனவே காமமற்ற வறண்ட நிலை ஏற்படாது கவலை வேண்டாம். இதுவரை தொடர்ந்து படித்து ரசித்தவர் அனைவருக்கும் என் நன்றி மேலும் வாசகர்கள் அனைவரையும் கதையைப்பற்றிய தங்கள் விமர்சனம் / கருத்துப் பரிமாற்றம் செய்யுமாறு வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். சரி தொடர்வோம் கதையை
பாகம் 01: கொலைத் திட்டம்
நான் அத்தையின் கைகளைப் பிடித்துப் பொறுமையாக விளக்கினேன். இது நான் அந்த வேலுவுக்கு மட்டும் செய்கிற உதவியல்ல, இந்தக் கோப்புகள் மாமாவுக்கு உடனடியாக வேண்டும். அப்படியானால் நான் இதை இந்த மோட்டார் வாகன உதவியோடு மிக விரைவாகக் கொண்டுபோய்ச் சேர்க்க அது மாமாவுக்கு மிக உதவியாக இருக்கும்.
அடுத்து நான் மாமாவைச் சந்தித்து ஏதாவது காரணம் கிடைத்தால் நாங்கள் ஊர் திரும்புவதைச் சில நாட்களுக்குத் தாமதப்படுத்த முடியலாம் எனத் தோன்றுவதாக எடுத்துரைத்தேன்.
"இந்த அத்தை மடியில் இருக்க எனக்கு எவ்ளோ ஆசைன்னு உங்களுக்குத் தெரியாதா? ஆனால் இந்த ஒரு நாள் கொஞ்சம் பொறுத்துக் கோங்க நான் இதைக் மாமாகிட்ட சேர்த்துட்டு சீக்கிரமா; அதுவும் நீங்க வீட்டுக்கு போகிறதுக்குள்ள நான் திரும்பி வந்துடுவேன்; என்னை நம்புங்கள். அப்புறம் இன்னிக்கு ராத்திரி இந்த மோகினிப்பிசாசு இஷ்டத்துக்கு ஆட்டம் போடலாம்; சரியா? என்னை நம்புங்க." சொல்லி நான் அவள் முன் மண்டியிட்டு அன்புடன் அவள் இடையை அணைத்து அவள் வயிற்றில் முத்தமிட்டேன்.
"ஸ்ஸ்ஸ்யெப்பா." என உணர்ச்சிப் பெருக்கில் என் தலையை ஆதரவுடன் தன் வயிற்றில் அழுத்திய வன்னம் சில நிமிடங்கள் அனுபவித்தவள் பின் மெல்ல விலக்கி, "ச்சீச்சீ எழுந்திரு கழுத; மகா திருடன் நல்லா தாஜா பண்ணி மயக்குறதுல பலே கில்லாடிடா நீ. லூசு பையன்; எரிகிற நெருப்பில் எண்ணெய்ய ஊத்துறாமாதிரி ஏங்கிகிட்டிருக்குற என் தொப்புள்ள முத்தம் கொடுத்து அசையக் கிளப்பி விடாத! சரி சரி சீக்கிரம்... ஐயோ! வேண்டாம்பா இந்த மோட்டார் சைக்கிள்ள நீ கொஞ்சம் நிதானமா பத்திரமா போயி பத்திரமா திரும்பி வருவேன்னு எனக்குச் சத்தியம் செய்துட்டு போய் வா."
சொல்லி விடைபெற்றுப் புறப்பட்டு அனிதாவை அணுகி நான் செல்லும் விவரத்தைச் சொல்ல; அனிதாவோ இது ஒரு நல்ல சந்தர்ப்பமென என்னுடன் வர முடிவு செய்தாள்.
நான் செல்ல வேண்டிய இடம் அந்தச் சுற்று வட்டார கிராமங்களுக்கு இருக்கும் ஒரே நகர மையம். அதனால் அங்கு நிறையப் பல்பொருள் வர்த்தக மையங்கள் (shopping center) உண்டு. அங்குச் சென்று பல பொருட்களை வாங்க அவர்கள் இருவரும் திட்டமிட்டிருந்ததாகவும் என்னுடன் இணைந்து கொள்வது மிகச் சரியாக அமைந்ததாகச் சொல்லி இணைந்தனர். ஜெயா அத்தையின் காரில் (வாகனத்தில்) செல்ல முடிவு செய்து மூவருமாகப் புறப்பட்டுச் சென்றோம்.
ஜெயா அந்த நகரத்தில் மேல்நிலைப் பள்ளி வாழ்க்கை தொடர்ந்ததாகவும் அந்த நகரம் அவருக்கு மிக அத்துப்படியெனத் தெரிந்தது. அந்த நகரத்தில் தான் மேல்நிலைப் பள்ளிப் பருவத்தில் வளர்ந்த தன் சொந்த வீட்டில் ஒரு நாள் தங்கிச் செல்ல விரும்புவதாக ஜெயா குறிப்பிட்டார். நான் ஷீலா மற்றும் என் சித்திக்கு விவரம் தெரிவிக்காததினால் தயங்கினேன்.
ஒரு மணி நேரப் பிரயாணத்தில் சென்றடைந்தோம். நகரத்திற்குச் சென்று ஜமீன் மாமாவைச் சந்தித்து அவரிடம் கோப்புகளைச் சேர்த்துவிட்டு பின்னர் மதிய உணவை முடித்து இரண்டு மணிநேர வர்த்தக மையங்களை (shopping center) சுற்றி வாங்க வேண்டியதை வாங்கி முடித்துக் கொண்டு மாலை ஆறு மணிக்கு முன் வீடு திரும்பத் திட்டம்.
நாங்கள் சென்று சேர்ந்த நேரம் கிட்டத்தட்ட மதிய உணவு வேலை. ஜமீன் மாமா அப்போதுதான் உணவுக்குச் சென்றதாகவும் திரும்பி வர ஒரு மணி நேரம் ஆகுமெனத் தகவல் கிடைக்க, வேறு வழியின்றி நாங்களும் உணவு உண்டு பின்னர் மீண்டும் அவரைத் தேடிச் செல்ல முடிவு செய்து அருகில் உள்ள உணவகம் நோக்கி நாங்களும் பயணித்தோம்.
வழியில் ஒரு போக்குவரத்துச் சமிக்கையில் வண்டி நிற்கையில் எங்கள் வண்டிக்கு மிக அருகில் மற்றொரு காரில் ஜமீன் மாமா பக்கத்தில், என் சித்தப்பா. ஆனால் இருவர் முகத்திலும் கடுகடுவெனக் கடுங்கோபம் பிரதிபலித்தது. இருவரும் ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளும் விதமாகத் தெரிந்தது.
ஆனால் நிச்சயம் தீவிர பிரச்சினையில் சிக்கி இருப்பது தெளிவாகத் தென்பட்டது. ஒரு கணம் அங்கேயே சந்தித்துக் கோப்புகளைக் கொடுத்துவிட்டுத் திரும்ப நினைத்த எனக்கு ஏதோ உள்ளுணர்வு தடுக்கச் சற்றே பொறுக்கச் சில வினாடிகளில் அவர்களுக்குள் ஏதோ பிரச்சினையெனப் புலப்பட; நான் சற்றே நிதானித்தேன்.
முதலில் என் சித்தப்பாவை ஜமீன் மாமாவுடன் நான் எதிர் பார்க்கவில்லை அடுத்தபடியாக இருவரும் ஏதோ கடுமையான பிரச்சினையில் சிக்கி இருப்பதெனத் தெரிய என்ன செய்யலாமெனச் சிறிதே யோசிக்கத் தொடங்கினேன். அதற்குள் வண்டி புறப்பட உணவகத்தை அடைந்து உண்டு முடித்தோம்.
நான் கவலை கொண்டிருப்பதை உணர்ந்த ஜெயா, "ஒன்றும் கவலைப் படாத ரகு அவுங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள் அவுங்களுக்குள்ள எந்தப் பிரச்சினையும் இருக்காது. நீ எதற்கும் பொறுமையா இருந்து பேசிட்டு என்ன செய்யனும்னு முடிவெடுத்து அப்புறம் எங்களுக்குச் சொன்னால் போதும். நீ எப்போ வீடு/ஊர் திரும்ப நினைத்தாலும் நாம உடனே புறப்படலாம். எல்லாம் உன் முடிவுப்படி செய்யலாம். நீ எதுவும் கவலைப்படாம போயிட்டு எங்களைத் தொடர்பு செய்து உங்கள் முடிவைச் சொல்லு."
"நீங்க என் சித்தப்பாவையும் ஜமீன் மாவையும் பார்த்தீர்களா?"
"முதல்ல நான் பார்க்கலை அப்புறம் நீ ரொம்ப நேரமா எங்கேயோ தீவிரமா கவனிக்குறதப் பார்த்தேன் அப்புறம் தான் கவனித்தேன். ஏதோ தீவிரமான பிரச்சினைன்னு தெரியுது. அதனால நீ முதல்ல போயி நிலைமைய தெரிஞ்சிகிட்டு அப்புறம் நாம பேசி முடிவெடுக்கலாம்."
அனிதாவுக்குத் தேவையான விவரங்களை விளக்கி, எனக்கு அவர்கள் வீட்டு விலாசம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண் தெரிவித்துப் பின்னர் என்னை அந்த மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் விட்டுவிட்டு அவர்கள் இருவரும் அங்காடிக்குச் சென்றனர்.
நான் சென்று ஜமீன் மாமாவைத் தேடிக் கண்டுபிடித்து அவர் இருப்பிடத்தை நெருங்க அது அந்தப் பிரம்மாண்டமான மாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் சற்றே ஒரு ஒதுக்குப்புறத்தில் அமைந்திருந்த மிகச் சிறிய இரண்டு மூன்று அறைகளைக் கொண்ட கிளை அலுவலகம் போல இருந்தது.
அந்த அலுவலகத்தின் முன் நான் கண்டது என்னைப் பிரமிக்க வைத்தது. மாமா ஊரில் வைத்துள்ள அதே மோட்டார் சைக்கிள் எந்தவித மாற்றமும் இன்றி. ஒரு கணம் அசந்துவிட்டேன். அநேகமாக மாமா அந்த மோட்டார் சைக்கிளை மறு பிரதியாக இங்கு ஒன்று வைத்திருக்கிறார் எனப் புரிந்தது. அருகில் ஒரு ஜன்னல் ஓரத்தில் ஒரு ஆள் நின்று அலுவலக அறைக்குள் ஏதோ நோட்டமிட்டபடி இருந்தான்.
நான் சற்று நெருங்கியதும் அலுவல அறையிலிருந்து மாமாவின் குரல் யாரையோ கடுங்கோபமாக மிகச் சத்தமாகத் திட்டிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். இன்னும் சற்று நெருங்க வெளியிலிருந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்தவர் சற்றே வித்தியாசமாக ஏதோ ஆதங்கத்துடன் அங்கலாய்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது.
நான் நெருங்கி அந்த ஆசாமியின் தோளைத்தட்ட அவரோ அதிர்ந்து பயந்து என்னை ஏதோ உயர் அதிகாரியெனத் தவறாகப் புரிந்து கொண்ட அந்த ஆசாமி, "வணக்கம் ஐயா நான் ஒண்ணும் செய்ல ஐயா; பெரிய ஐயா கிட்ட ஒரு ரொம்ப முக்கியமான சங்கதி சொல்லனும்னு காத்திருக்கிறேன் ஐயா நான் வேற எந்தத் தப்புத்தண்டாவும் செய்ல ஐயா." எனப்புலம்பினார்.
நான் உடனே அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொண்டு, "அதென்ன எங்களுக்குத் தெரியாத முக்கியமான விஷயம்?" கேட்டுக்கொண்டே உள்ளே எட்டிப் பார்க்க மாமா தொடர்ந்து கொண்டிருந்தார்.
மாமாவின் குரல், "அவனுக்கு எப்டிடா தெரிஞ்சிது? அவன் இப்ப எங்க பதுங்கிட்டு இருக்கான்? அவன் இன்னா பெரிய புடுங்கின்னு நெனைப்பா? ங்கோத்தா அடியோட வெட்டி சாச்சிட்டு போயிடுவேன். இதெல்லாம் ஒண்ணும் புதுசில்ல எனக்கு; என் கிட்டேயேவா? அந்தத் தெவடியாப்பையனை வெக்க வேண்டிய எடத்துல வெச்சிருக்கனும்.
தராதரம் தெரியாத பிச்சைக்கார நாய்க்கு இன்னிக்கு வாழ்வு வந்துடிச்சின்னு ஆடரானா? அவனுக்கு அழிவுக் காலம் வந்துடுச்சி. அவனப் போடுறதுக்கு முன்ன இதையெல்லாம் அந்த நாய்க்குச் சொன்ன பொறம்போக்கு யாருன்னு தெரியனும். மரியாதையா கண்டுபிடிச்சி சொல்லுங்க நீங்களே ஒத்துக்கிட்டா கையோ காலோ மட்டும் தான்.
நானே கண்டு புடிச்சேன் ங்கோத்தா உயிரோட எரிச்சிடுவேன். அவன் என்னா ஆபீஸ கொலுத்துரது நான் அவனையும் அவனுக்குத் தொன போன காட்டிக்கொடுக்கிற நாய்களையும் ஒட்டு மொத்தமா பஸ்பமாக்கிடுவேன்."
அந்த ஆசாமி, "அதுதாங்க அந்த ஆளு யாருன்னு தெரியும்; அப்புறம் பூவனூர் கிராம அதிகாரி இருக்கிற இடம் எல்லாம் கண்டுபிடிச்சிட்டேன் ஐயா."
மாமா தொடர்ந்து சத்தமாகக் கர்ஜித்துக் கொண்டிருந்தார். அவர் இப்போதைக்கு முடிக்க மாட்டாரெனத் தோன்ற நான் உள்ளே செல்ல எத்தனிக்க
அந்த ஆசாமி, "ஐயா வேணாங்க அவரு கோவத்தில் இருக்குறப்போ யாரையும் பாக்க மாட்டாருங்க ஏடாகூடமா ஏதாச்சும் செய்துடுவாரு."
நான், "அட எனக்கேவா? உன் பேரென்ன?
அந்த ஆசாமி, "குமார்; ஐயா நீங்க புதுசா? அவரு கோபத்த பத்தி தெரியாம இருக்கீங்க ரெண்டு வாரத்துக்கு முன்ன தாஸில்தாரு இப்படிதான் நான் சொல்றத கேக்காம போயி நல்லா வாங்கிக் கட்டிகிட்டாரு எங்களையும் வாங்க வெச்சிட்டாரு."
நான், "யாரு நம்ப... தாசில்,"
குமார், "ஆமாம் ஐயா நம்ம பத்மநாபன் ஐயா தாங்க. தலையில் கட்டு போட்டிருக்குறத நீங்க பாக்கலையா? அய்யோ அதை ஏன் கேக்குறீங்க! அப்புறம் வாங்கிக் கட்டினது நானும் கந்தனும் தாங்க."
நான், "அதுக்கு இப்ப என்ன செய்யச் சொல்ற?"
குமார், "ஐயா! அவசரமாயிருந்தா சொல்லுங்க நான் கந்தனுக்கு ஜாடை செய்றேன் அவன் சொன்ன பிறகு ஜமீன் ஐயா சரின்னா நீங்க போவலாம். அவசரமில்லேன்னா உங்க பேரும் சங்கதியும் சொல்லிட்டு போங்க நாங்க அவரு கொஞ்சம் தணிந்த பின்ன சொல்றோம்."
நான், "சரி சரி ஒரு பத்து நிமிஷம் பாக்கலாம்; அதுக்குள்ள நீ என்ன கதை வெச்சிருக்கென்னு சொல்லு. நான் சொல்ல வந்ததையே நீயும் சொல்ற எது நிஜம் எது பொய்னு பார்க்கலாம் (எனப்போட்டு வாங்கத் திட்டமிட்டேன்) மொதல்ல அந்தப் பூவனூரான் எங்க இருக்கான்னு சொல்லு அதவெச்சி நீ சொல்றது எவ்ளோ சரின்னு தெரிந்திடும்."
குமார், "அது வந்து... இப்ப எங்க இருக்கார்னு சரியா தெரியாதுங்க ஆனா இன்னிக்கு ராத்திரி பக்கத்தில் நத்தனூர்ல ஒரு பங்ளால அந்தச் சிறுக்கி சிரிஸா கூட ஏற்பாடு செய்திருக்காங்க ராத்திரி பத்து மணிக்குப் போனா கோழி அமுக்குராமாதிரி ஒரே அமுக்கு அமுக்கிடலாமுங்க. நான் காலைல ஐயா சொன்னதால அந்தச் சிறுக்கிய இன்றைக்கும் நாளைக்கும் ஏற்பாடு செய்யப் போனப்போ அது போன் பேசிகினு இருந்துச்சி என் அதிர்ஷ்டம் அப்பத்தான் பேச ஆரம்பிச்சாங்க.
சிரிஸா போன்ல பூவனூரார் கிட்டத்தான் பேசிக்கிட்டிருந்தா(ள்). அவுங்க பேசிக்கிட்டதுல தெரிந்த விஷயம் இதுதான். அந்தச் சிறுக்கி நம்ப ஜமீன் ஐயாவுக்கு ஏற்பாடு செஞ்ச ஏதோ ஒரு நாள் கொஞ்சம் முன்னாடி போயிருக்குறா. அப்போ ஐயா போன்ல யாரு கிட்டியோ இந்தப் பூவனூரார் ரகசியத்தை ரொம்ப விலாவாரியா பேசிக்கிட்டு இருந்திருக்காரு அதை முழுசும் கேட்டுட்டா அந்தச் சிறுக்கி. அதை மொத்தம் பூவனூர் கிராம அதிகாரிக்குச் சொல்லி அவர் கூடச் சேந்துகிட்டா.
அதனாலத்தான் இப்பெல்லாம் நம்ப ஜமீன் ஐயா கூப்பிட்டா ஏதாவது சாக்கு சொல்லி தப்பிச்சிக்குறா. அதுக்கும் மேல அவ(ள்) சொல்றா நம்ப ஜமீன் ஐயா அவ மேல ரொம்ப ஏக்கமா இருக்குறாதாவும் அவ(ள்) சொன்னா எதுவும் செய்வாருன்னு தைரியமா சொல்றா ஐயா.
நம்ப ஜமீன் ஐயா அவளுக்காக ஏங்கி கூப்பிடுவார்னு அவ்ளோ நம்பிக்கையோட சொல்றா ஐயா. அதைக் கேட்டதும் எனக்கு ரத்தம் கொதிச்சிதுங்க: அப்பவே போயி ஒரே வெட்டா வெட்டி போட்டுட துடிச்சிதுங்க. நான் ஆத்திரத்தை அடக்கிட்டு மொதல்ல ஐயா கிட்ட சொல்லிட்டு அவரு சொன்ன பிறகு உடனே அவளை முடிச்சிடனும்னு வெறில இருக்கேன் ஐயா."
நீண்ட உரையாடலில் பல விஷயங்கள் புரிய; மெல்லத் திட்டம் வகுத்தேன். முதலில் அந்த ஆசாமியைப் பல குறுக்கு விசாரணை செய்ததில் அவன் சொல்வது உண்மையெனத் தோன்றியது. அடுத்த கட்ட நடவடிக்கையாக அவனை வைத்து அந்தச் சிரிஸாவை நோட்டமிடத் திட்டமிட்டு அவனைத் தயார்ப்படுத்தி அனுப்பினேன்.
அடுத்த நடவடிக்கையாக ஷீலா அத்தைக்குத் தேவையான அளவுக்கு விவரங்களைத் தெரிவித்து அன்று இரவு நான் வீடு திரும்ப முடியாதெனத் தெரிவித்து மேலும் மற்ற விவரங்களை நான் பின்னர் விளக்கமாகத் தெரிவிப்பதாக உறுதியளித்தேன்.
ஜெயா அத்தைக்கு ஓரளவு விவரங்களைத் தெரிவித்து ஜமீன் மாமாவுக்கும் என் சிற்றப்பாவிற்கும் என்னால் முடிந்த உதவிசெய்ய முடிவு செய்ததையும் தெரிவித்துப் பிறகு முழு விவரங்களைத் தெரிவிப்பதாகச் சொல்லி முடித்தேன்.
தொடரும்