Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு
பாகம் 25: பானுவின் அம்மா
நான் மீண்டும் புன்னகைத்து, "நன்றிக்கடன் மட்டுமா? (சற்றே கயல்விழியை நோக்கி சற்றே குறும்புத்தனமாக புன்னகைத்த வன்னம்) அப்படியா? நீங்க 'ஏண்டா ஒரு பத்து வயசு பின்னாடி பிறந்திருக்கலாமேன்னு' நினக்கலை; (கயல்விழி சற்றே வியந்து புன்னகைக்க) சரி அதை விடுங்கள் இப்போது நான் எங்கேயாச்சும் கண்காணாத தொலை தூரத்துக்குப் போயி கல்யாணம் செய்து வாழலாமான்னு கூப்பிட்டாள் என் கூட வரமாட்டீங்க?"
நான் கேட்டதும் இருவரும் அதிர்ந்து ஒருவரையொருவர் நோக்கி பின்னர்க் குலுங்கக்குலுங்க சிரித்த வன்னம் கயல்விழி, "அப்பப்பா என்னா தைரியம்! இவ்ளோ குறும்பா இந்தத்தம்பி! சொல்லி எழுந்து வந்து என் காதைத்திருகி, "அப்படியே கடித்து தின்னுடுவேன்."
நான், "சரியா இல்லையா என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்."
கயல்விழி, "ஹூம் இந்தச் சின்ன வயசில் எவ்ளோ அனுபவசாலியான பேச்சு (சொல்லி வியந்தவர் என் கண்களை நோக்கி) எப்போன்னு சொல்லு தம்பி, நான் தயாரா இருக்.... (கேன்) ஹாவ்."
கயல்விழி தலையில் சற்றே செல்லமாக ஒரு குட்டியபடி மல்லிகா, "முட்டாள் பொன்னே அந்தத் தம்பிதான் ஏதோ குறும்பா விளையாடுதுன்னா நீயும் சரின்னு."
குறுக்கிட்ட கயல்விழி, "அக்கா நீங்கதான் புரியாமல் முட்டாள்தனமா பேசிக்கிட்டிருக்குறீங்க; ஆணுக்கும் பொன்னுக்கும் ஆசை வருவது இயற்கை; ஏன் நீங்க யார் மேலேயும் ஆசைப்படலியா? அப்போ உங்கள் அப்பா அம்மா உங்களை வளர்த்தது சரியில்லையா?"
மல்லிகா குறுக்கிட்டு, "சரிசரி என் தப்புத்தான்; தம்பி என்னை மன்னி (ச்சிடுங்க)."
நான் அதிரடியாகக் குறுக்கிட்டு, "வேண்டாம்மா வயசில் பெரியவர்கள் நீங்க அப்படியெல்லாம் சொல்லக் கூடாது; உங்கள் மனசு ஏதோ பதற்றத்தில அதிர்ச்சியில் நீங்க அப்படிச் சொல்லி இருக்கலாம்." அதற்குள் அனைவரும் உண்டு முடித்து நீள் சாய்வு இருக்கையில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம்
நான் மல்லிகாவை நோக்கி, "அம்மா.... சரி நான் உங்களை அம்மான்னு கூப்பிடலாமா?"
சரியெனத் தலையசைத்து உடனே, "அதென்ன இவ்ளோ நேரம் கயல் கிட்டப் பேசிக்கிட்டிருந்தப்போ என்னை அத்தைன்னு சொன்னே ஆனால் இப்போது அம்மான்னு கூப்பிட ஆசைப்படுறே."
நான், "அத்தைன்னு கூப்பிடுகிறது என்... இல்லை உங்கள் பொன்னு ஆசைன்னு வெச்சிக்கலாம்... அம்மான்னு கூப்பிட்டா உங்களுக்குப் பிடிக்கலாம் இது என் அனுமானம்."
மல்லிகா, "ஏன் அப்படி."
அதுவரை புன்னகைத்திருந்த நான் சற்றே தீர்க முகத்துடன், "சொந்த குழந்தையே அம்மான்னு கூப்பிட முடியாமல் உங்கள் மனசு ஏக்கத்திலிருந்தால்."
ஒரு கணம் அதிர்ந்து உடனடியாக மீண்ட மல்லிகா, "ஹூம் நீ நிறைய ஆழமா யோசிக்குறப்பா; உண்மையில் அது மிகப் பெரிய விஷயம் ஆனால் அதைப்பற்றி இத்தனை வருஷத்தில் நான் ஒரு முறைக்கூட நினைத்ததில்லை... ஏனோ தெரியலை."
நான், "அந்த அளவுக்கு உங்களைப் பல பிரச்சினைகள் மனசைத் திசை திரும்பவிடாமல் உங்கள் கவனத்தை ஈர்த்திருக்கு. தயவு செய்து இப்போதாவது பிரச்சினை என்னன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள்."
நீண்ட தயக்கத்துக்குப் பின், "சில விஷயங்கள் சிலருக்குத் தெரிந்தால் பிரச்சினைகள் பல மடங்கு வெடிக்கும் அதனால் பாதிப்புதான் அதிகம் தம்பி."
நான், "அம்மா நீங்க முழு விவரத்தைச் சொல்லி யார் யாருக்கு தெரியக்கூடதுன்னு நினைக்குறீங்களோ இல்லை வேறு யாருக்கும் தெரியாமல் இருக்கும்படி பாதுகாப்பது என் கடமை, இது என் வாக்குறுதி; என் மேல நம்பிக்கை இருந்தால் சொல்லுங்கள் இல்லை... எப்போது நம்பிக்கை வருதோ அப்போது சொல்லுங்கள்; ஆனால் என்... இல்லை இல்லை உங்கள் பானுவுக்கு மட்டுமாவது சொல்லவிடுங்க."
சற்றே புன்னகைத்த மல்லிகா, "தம்பி உங்களுக்கு இப்பவே சொல்லுகிறேன் ஆனால் வேற யாருக்கும் தெரியாமல் இருக்கனும்; சில விஷயங்களைச் சிலர் நம்புகிறதில்லை அதிலும் உங்களைப்போல இந்த இளையர்கள் குறிப்பா ஆண் பிள்ளைகள் நம்புவதில்லை."
அவர் கதையை விவரித்தார்; அதன் சுருக்கம்
மல்லிகாவும் சரோஜினியும் (ஜமீன் மாமாவின் முதல் மனைவி) இரட்டையர்கள் ஜமீன் மாமாவின் ஆகமூத்த சகோதரியின் மகள்கள்; தனு (ஜமீன் மாமா) மல்லிகா இருவரும் காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த போதுதான் பிரச்சினை தெரிய ஆரம்பித்தது.
தனு மாமாவுக்குச் செவ்வாய் தோஷம் இருப்பதாகவும் அவர் அப்படித் தோஷம் உள்ள வேறு ஒருவரையே திருமணம் செய்ய வேண்டுமெனவும் மீறினால் உயிர்ப் பலி நிச்சயம் எனவும் மல்லிகாவின் சித்தி (அதாவது தனுவின் அடுத்த மூத்த சகோதரி தற்போதைய மாமியார்; ஷீலா அத்தையின் தாயார் பெயர் சகுந்தலா) பலமுறை சொல்லியும் அவர் பேச்சைக் யாரும் கவனிக்காமல் நடந்து கொண்டது பல உயிர்களைப் பலி வாங்கி விட்டதாகவும் அதைத் தடுக்கவே அவர் இந்த முடிவெடுத்ததாகக் கூறினார்.
அவர் குறிப்பிட்ட உயிர் பலி மூன்று, மல்லிகாவின் தாய் தந்தை என இருவர் முதலில் அடுத்து மல்லிகாவின் ஒரே சகோதரி சரோஜினி என் கூறினார். அதாவது இந்தத் தோஷம் பிரச்சினை தெரிந்ததும் தான் (மல்லிகா) மாமாவை விட்டு விலகியதாகவும் ஆனால் மாமா அதில் சிறிதும் நம்பிக்கை இல்லாமல் மல்லிகாவைத் திருமணம் செய்ய முடிவெடுத்துச் செயல்படத் தன்னால் எதுவும் செய்ய முடியாமல் தவித்தபோது அவர் சித்தி சகுந்தலா சொன்ன யோசனைப் படி செயல்பட்டு விலகினார்.
சகுந்தலாவின் முதல் யோசனை; பொதுவாக ஆண்கள் பெண்ணாசையில் துடிப்பது வழக்கம்; அதாவது தனுவுக்கு மல்லிகா மீது மோகம்; அது தீர்த்துவிட்டால் அவர் மனம் மாரி விடுவார் எனவும் அந்த மோகத்தைத் தீர்க்க மல்லிகாவைத் தனுவுடன் உடலுறவு கொள்ள யோசனை சொன்னார் அப்படிச் செய்தால் அந்த மோகம் தீர்ந்து தனு மனம் மாரி விடுவார் என யோசனை கூற மல்லிகாவும் அதன் படியே செய்தார்.
ஆனால் தனு மாமா அவர் மீது தீரா காதல் கொண்டு விலகாமல் தொடர மல்லிகாவும் சகுந்தலாவும் மீண்டும் என்ன செய்வதெனக் கலந்தாலோசித்து எடுத்த முடிவு மல்லிகா தனுவை விட்டுப் பிரிந்து கண் காணாத தொலை தூரத்துக்குச் சென்று விடுவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் செல்வதென முடிவு செய்தனர்.
பின்னர் அதையும் சற்றே மாற்றி மல்லிகா தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்துவிட்டுச் சென்றதாகவும் கூறினார். தான் உயிருடன் இருப்பது தெரிந்தால் அவர் திருமணம் செய்யாமல் தன்னைத் தேடி அலைய வாய்ப்பு இருக்கிறதென யோசித்து அவ்வாறு முடிவெடுத்ததாகவும் கூறினார்.
அதன்பின் மல்லிகா இறந்த செய்தியால் தனு மனம் வருந்தி மிகவும் வேதனை அடைந்ததால் அவருக்கு உடனே திருமணம் செய்து வைக்க மல்லிகாவின் பெற்றோர், மற்றும் தனுவின் பெற்றோர் ஆகியோர் விரைந்து செயல்பட்டு சரோஜினியை தனு மாமாவுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
சரோஜினியும் மாமாவைப் போலவே அந்தச் செவ்வாய் தோஷத்தில் நம்பிக்கையின்றித் தனுவை மணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் மல்லிகா/சரோஜினியின் பெற்றோர் இருவரும் ஒரு வாகன விபத்தில் பலியாயினர் இரண்டு வருடத்தில் சரோஜினியும் பலியானாள் எனச் சொல்லி முடித்தார்.
இதைக் கேட்டதும் சற்றும் பொறுக்காமல் கயல்விழி, "அட என்ன அக்கா நீங்க இப்படியா இந்த செவ்வாய் தோஷம் கதையெல்லாம் நம்புவீங்க." கயல்விழிக்கு இந்த ஜாதகம்/செவ்வாய் தோஷம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லையென உடனடியாக வெளிப்படுத்த
அதை எதிர்பார்த்த மல்லிகா, "எனக்குத்தெரியும் நீங்க யாரும் நம்ப மாட்டீங்கன்னு."
நான் குறுக்கிட்டு, "அப்படி அதெல்லாம் உண்மை இல்லைன்னு சொல்லிட முடியாது; நான் நம்புகிறேன் நீங்க சொல்லுங்கள் (கயல்விழிக்கு மறைமுகமாகச் சற்றுப் பொறுக்கச் சொல்லி ஜாடை செய்து; கயல்விழியை நோக்கி) அதுதான் அவுங்க இவ்ளோ பாதிக்கப்பட்டிருக்கீங்களே; அப்பா அம்மா, கூடப்பிறந்தவங்க இப்படி எல்லாரையும் இழந்து நிற்கிறவுங்களைப் போய் இப்படிக் கேக்குறீங்க."
இதைக்கேட்டதும் என்னை அள்ளி அணைத்துக்கொண்டு என் தலையைக் கோதிய வன்னம், "சின்னப் புள்ளைக்குத் தெரிவது கூட உனக்குத் தெரியல கயல்; எது எப்படி இருந்தாலும் மத்தவங்க உணர்ச்சிகளை மதிக்கத் தெரிந்த குணமே ரொம்ப உயர்ந்தது."
நான் அவர் முதுகைப் பாசமாக வருடிய படி, "கவலைப்படாதீங்கம்மா நாங்க எல்லாரும் இருக்கிறோம் உங்களுக்கு; கொஞ்சம் மனசை தேத்திக்கோங்க; நான் உங்களையும் பானுவையும் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்குவேன்; நீங்கத் தைரியமா இருங்க."
அதற்குள் ஓரளவு உண்மை புரிந்த கயல்விழி, "மன்னிச்சிடுக்கா நான் கொஞ்சம் அவசரப்பட்டு உங்கள் மனசைப் புண்படுத்திட்டேன்."
நான், "உங்கள் அப்பா அம்மா வாகன விபத்து பத்தி கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்."
மல்லிகா, "நான் தற்கொலை செய்துகிட்டு இறந்து போனதால் தடைப்பட்ட கல்யாணத்தை எனக்குப் பதிலா சரோஜினிக்குச் செய்து வைத்து அதுக்கு வேண்டுதலா திருப்பதிக்கு போயி திரும்பும்போது அந்த வாகனம் மலையிருந்து உருண்டு விழுந்து அவுங்க செத்துட்டாங்க.
அது உண்மையில் தனுவும் சரோஜினியும் போய்க்கொண்டிருந்த வாகனம், அந்த விபத்துக்கு கால் மணி நேரத்துக்கு முன்னேதான் ஏதோ காரணத்துக்காக எங்க அப்பா, அம்மா வாகனம் மாறி உட்காந்திருக்காங்க அதனால் இவுங்களுக்கு வந்த ஆபத்து அவுங்களுக்குப் போயிடுச்சி; ஆனால் எப்படி இருந்தாலும் இரண்டு உயிர்ப் பலி வாங்கிடுச்சி.
அந்தக் வாகனத்தில் ஏதோ பிரச்சினைன்னு அந்தக் வாகனம் ஓட்டிவந்த ஓட்டுநர் நிறுத்திட்டு தனு வாகனத்தில் இருந்து ஏதோ கருவிகளை எடுக்க வந்திருக்கிறார். ஆனால் நிறுத்தின வாகனம் மெல்லத் தானாகவே நகர ஆரம்பித்து போயி மலையிலிருந்து உருண்டு விழுந்து எங்க அப்பா அம்மா ரொம்ப அகோரமா செத்துட்டாங்க; அவுங்க பிணத்தைக் கூட யாராலும் பார்க்க முடியாமப் போச்சி."
நான், "அது அந்த ஓட்டுநர் செய்த பெருந்தவறு; அது எப்படி அப்படிப் பொறுப்பில்லாமல் வண்டியைச் சரியாக நிறுத்தாமல்... அந்த ஓட்டுநரைத் தண்டிக்கலையா?"
மல்லிகா, "வாகனம் உருண்டதும் அந்த ஆள் பயந்து ஓடி பின்னர் தலைமறைவாயிட்டாரு; என்ன செய்வது உயிர் போனது போனதுதானே?"
நான், "சரி சரோஜினி அத்தைக்கு என்ன ஆச்சி? எப்படி இறந்தாங்க?"
மல்லிகா, "அவள் முதல்ல இருந்தே இதுல நம்பிக்கை இல்லாததால என் சித்திகிட்ட வாக்குவாதம் செய்வா அதனால் அவுங்க இரண்டு பேருக்கும் ஒத்துப்போகாது ஆனால் மாமாவுக்கு சகுந்தலா அக்கான்னா நிறையப் பிரியம் அக்கா சொல்லைத் தட்டாமல் செய்வார்.
அதனால சரோஜினிக்கு பிடிக்கலைன்னாலும் மாமா சொல்கிறதுக்காக செய்வா; எங்க எல்லாரையும் விட நிறையப் புத்திசாலி சரோஜினி; இரண்டு பொன்னுங்களைப் பெற்று நல்லாத்தான் இருந்தா ஆனால் திடீர்னு மாரடைப்பில் செத்துட்டா; இப்போது நான் இப்படிச் செய்வதெல்லாம் அவ செய்த திட்டம் தான்."
நான் உடனே குறுக்கிட்டு, "ஹான் என்ன அதெப்படி முடியும்; நீங்கதான் தற்கொலை செய்து இறந்துட்டதா செய்தி பரப்பித் தலைமறைவாக இருக்குறீங்க நீங்க உயிரோடு இருக்கிறது உங்களுக்குக் குழந்தை பிறந்தது இதெல்லாம் மத்தவங்களுக்குத் தெரியாதே."
மல்லிகா, "ஓஹ், நான் சொல்ல மறந்துட்டேன்; நான் உயிரோடு இருப்பது குழந்தை பிறந்தது எல்லாம் அவளுக்குத் தெரியும்; அது வந்து சரோஜினிக்கு கல்யாணம் நடக்கும் முன்னே நான் அவளை ரகசியமாகச் சந்தித்து அவளைக் கல்யாணம் செய்துக்க வேண்டாம்னு தடுக்க முயற்சி செய்தேன்.
ஆனால் நான் எவ்வளவோ தடுத்தும் கேக்கல நான் ரொம்பச் சண்டை போட்டுவிட்டு திட்டிட்டுப் போய்விட்டேன் அப்புறம் இரண்டு மூன்று முறை என்னைச் சந்திக்கத் துடித்தால் ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை/கோபம்
கடைசியா அவள் சாவுறதுக்கு முன்னே ஒரு ஆறு மாதத்துக்கு முன் அவளே என்னைத் தேடிக்கிட்டு வந்துட்டா; என் கூடச் சண்டை போட்டதுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு அழுதா அப்புறம் இந்த ஏற்பாடெல்லாம் செய்தது அதாவது பானுவை என்னிடமிருந்து பிரித்து அவள் வளர்க்க முடிவு.
அப்புறம் மாதாமாதம் பானுவை சந்திக்குறது; அப்புறம் நான் உயிரோடு இருக்குறது யாருக்கும் தெரியக்கூடாது; முக்கியமாக தனு மாமாவுக்கும் எங்க சித்தி சகுந்தலாவுக்கும்; அப்புறம் என்னை இதுல எந்த மற்றமும் செய்யக்கூடாதுன்னு யாரிடமும் சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கிட்டா; ஆனால் நீங்க இப்படிச் செய்து என் சத்தியத்தை மீற வெச்சிட்டீங்க."
நான் அவர் கைகளை ஆதரவாகப்பிடித்து, "அம்மா நீங்க இத்தனை வருடங்களாகப் பின்பற்றிச் செய்து அவுங்க வாக்கை காப்பாத்தீட்டீங்க; முக்கியமா அவுங்க அப்படிச் செய்ததுக்கு முக்கியக் காரணம் இது குறிப்பாக எதிராளிகள் சிலருக்குத் தெரியக்கூடாதென்பதுதான்.
நிச்சயமா நாங்கள் உங்கள் எதிராளிகள் இல்லை அதனால இது நீங்கச் சத்தியத்தை மீறினதா ஆகாது; நான்... என் செயல் உங்கள் மனசைப் புண்படுத்தி இருந்தா என்னை மன்னிச்சிடுங்க."
சொல்லி அவர் காலில் விழுந்து மன்னிப்பு கோர அதிர்ந்தவர், "ஐயோ என்ன தம்பி ஒரு தோளுக்கு மேல வளர்ந்த ஆம்பளைப் புள்ள போயி இப்புடி என் காலை புடிச்சிக்கிட்டு; எழுந்திருங்கள்." என்னை அன்புடன் அணைத்து நெற்றியில் முத்தமிட்டு என் கண்களை உற்று நோக்கி, "நல்ல புள்ளதான் போங்க... என் பொன்னு ஆசைப்படுகிறது தப்பில்லை; சரி தம்பி நான்தான் பானுவோட அம்மான்னு பானுவுக்கு தெரியுமா நீங்க சொல்லிட்டீங்களா?"
தொடரும்