Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி
பாகம் 28: குற்றம் நிரூபணம்
சகுந்தலா, "அட சின்னப் பையனா இருந்தாலும் பொறுமையாக யோசிக்கிற புத்தி இருக்கு; பரவாயில்லை நீ பொழச்சிக்குவ; (மாமாவை நோக்கி) சரிசரி சும்மா வளவளன்னு எதற்குப் பேச்சு; இதோபார் தனஞ்செயா! நான் சொல்வதை நல்லா கவனமா கேளு.
கிட்டத்தட்ட 30 வருஷமா நான் உனக்கு எது நல்லது எது கெட்டுதுன்னு அக்கறையாகக் கவனித்து எடுத்துச் சொல்லி பத்திரமா பார்த்துக்கிட்டு வரேன்; ஆனால் நீயும் எத்தனையோ விஷயங்களில் என் பேச்சை க்கேட்காம உன் இஷ்டத்துக்கு முடிவு செய்து உயிர்ப் பலியானதுதான் மிச்சம்.
அப்பவே சொன்னேன் தோஷமிருக்குன்னு என் பேச்சை மதிக்காமல் சரோஜினியைக் கல்யாணம் செய்து இரண்டே வருஷத்தில் இந்த இரண்டையும் உன் கையில் கொடுத்துட்டு அவள் போய்ச் சேர்ந்துட்டாள்.
கடைசியில் யார் செய்த புண்ணியமோ இவள் (ஷீலாவை சுட்டி) உனக்குன்னே தோஷத்தோடு வந்து பிறந்தாள்; அவளைக் கட்டின பிறகுதான் எல்லாம் பிரச்சினை இல்லாமல் சுமுகமா போய்க்கிட்டிருக்கு; இப்போது அதையும் கெடுக்கலாமென்று அவள் பொன்னுங்க ஆடுறாளுங்க.
என் பேச்சைக் கேட்காமல் உயிர்ப் பலி கொடுத்தது போதும் இனி மேலாவது என் பேச்சைக்கேட்டு நடக்கிற வழியப்பாரு; இந்தச் சொத்து நம்ம பாட்டன் சொத்து அதைப் பத்திரமா பார்த்துக்கொள்ள வேண்டியது நம்பப் பொறுப்பு.
அது எவ்ளோ முக்கியமென்று அதன் மதிப்புத் தெரியாமல் சின்னப்பசங்க இப்படி எடுத்தோம் கவிழ்த்தோமென்று முடிவெடுத்து அது கையைவிட்டுப் போனபிறகு எதுவும் செய்யமுடியாது.
உன் பொன்னுங்களுக்கு அதன் மதிப்பும் தெரியலை சுய புத்தியும் இல்லை சொல் புத்தியும் இல்லை இதையெல்லாம் இப்படியே விட்டால் அப்புறம் நாளைக்கு எல்லாத்தையும் இழந்து அப்புறம் கண்ணைக் கசக்கிக்கிட்டு வந்து நிற்கும் அதெல்லாம் நடந்த பிறகும் புத்தி வராது.
நீ தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருக்கனும் கடைசீல நீ ஒன்றுமில்லாமல் ஓட்டாண்டியாகத்தான் நிற்கவேண்டும், அப்புறம் என் பேரன் பிச்சைதான் எடுக்கனும்; அதுக்குத்தான் நீங்க எல்லாரும் வழி செய்கிறீர்கள்.
நான் இருக்கிற வரை அதெல்லாம் நடக்க விடமாட்டேன்; நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் உன் பொன்னு புத்திக்கு எட்டலை நானும் எப்படியும் புரிய வைத்திடலாமென்று இருந்தேன்.
ஆனால் அதுக்குள்ள இந்தக் கழுதைகள் இப்படிச் செய்து வந்து நிக்கிதுங்க; இதற்கு மேல் தள்ளிப்போட முடியாது; உன் பொன்னுக்கு நல்லா புரியுரமாதிரி எடுத்துச் சொல்லி, சட்டு புட்டுன்னு ஆக வேண்டிய வேலையப் பாரு."
ஏதும் அறியாதவாறு மாமாவை நோக்கி நான், "உயிர்ப் பலியா என்ன நடந்தது?"
தனு, "அது ஒரு பெரிய கதை; எனக்குச் செவ்வாய் தோஷம் இருக்காம்; அதிலெல்லாம் நம்பிக்கை இல்லாமல் என் பெரிய அக்கா பொன்னு மல்லிகாவும் நானும் கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டோம்.
ஆனால் மெல்ல மல்லிகா அதையெல்லாம் நம்ப ஆரம்பித்து ஒரு நாள் திடீரென்று மனசு மாறி எங்களை விட்டு தற்கொலை செய்துக்குறேன்னு கடிதம் எழுதி வெச்சிட்டு தலை மறைவாயிட்டாள். அதுக்குப் பிறகு நான் சோகத்தில வாடினேன் அப்போ என் நிலைமையப் பார்த்து மல்லிகாவின் சகோதரி சரோஜினி என்னைக் கல்யாணம் செய்துகிட்டாள்.
கல்யாணம் முடிந்ததும் ஒரு விபத்தில் என் பெரிய அக்காவும் அக்கா புருஷனும் இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் சரோஜினியும் இவுங்க இரண்டு பேரையும் பெத்துக்கொடுத்திட்டு அவளும் கண்ணை மூடிவிட்டாள்.
எனக்கு இந்தத் தோஷத்திலெல்லாம் நம்பிக்கை இல்லை ஆனால் தொடர்ந்து ஒவ்வொருத்தரா மூனு உயிர் போனது எங்களுக்குப் பெரிய அதிர்ச்சி; நானும் வேறு வழி இல்லாமல் நம்ப வேண்டிய நிலைக்கு வந்துட்டேன்."
நான், "உங்கள் மனைவி சரோஜினி எப்படி இறந்தாங்க?" கேட்டவாறே என் முன் திட்டப்படி பானுவை ஜாடை செய்தேன்.
தனு, "என்ன சொல்றது சாதாரண வயிற்று வலியென்று மருத்துவமனையில சேர்த்தோம் திடீரென்று மாரடைப்புன்னு."
நான், "மாரடைப்பா அந்த வயதுக்கு." சொல்லி பானுவை நோக்க அவளும் மாமா பதில் சொல்ல ஆரம்பித்த சில நொடிகளில் குறுக்கிட்டவாறு பேசினாள்
தனு, "அதுதான் எப்படின்னு,"...
பானு, "கொலை செய்து அதை மாரடைப்புன்னு."
உடனே அதிர்ந்த மாமா, "கொலையா? அட வாயாடி உண்மை தெரியாம வாய்க்கு வந்தபடி உலறாதே."
சகுந்தலா,, "எவ அவ?... இவ எதுக்கு இங்கே வந்து; (தனுவை நோக்கி) என்னடா கண்ட நாயெல்லாம் வாயாடுது?" எதிர்பார்த்த படி மிகக் கோபமாகச் சத்தமாக வெளிப்படுத்தினார்.
பானு, "நான் ஒண்ணும் உலறலே; இதோ ஒரு பத்து நிமிஷத்தில நிரூபிக்கிறேன்." சொல்லி அவள் சென்று தொலைப்பேசியை நாட; எதிர் பார்த்த படி சகுந்தலா மிக உக்கிரமாக அவளைத் தடுக்க முயற்சி செய்தார்.
மாமாவும் அத்தையும் சகுந்தலாவின் பதற்றத்தை நோட்டமிட்ட சந்தேகப்பட்டவாறு வெளிப்படுத்த அதனால் சற்று நிதானித்தார் சகுந்தலா. அதற்குள் பானு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மிகச் சுருக்கமாகப் பேசி முடித்தவள் உடனடியாக ஷீலாவை அணுகி, "நீங்க பேசிக்கிட்டே இருங்கள் இதோ வந்துடுவாங்க." என வார்த்தைகளை உதிர்த்து வாசலை நோக்கி நகர்ந்தாள்.
யார் வருவார்கள் எனக் குழம்பி கேள்விகளை எழுப்பியபடி அடுத்து அவர்கள் வரும் வரை தர்க்கம்/வாதம் தொடர விட்டுக் காலம் கடத்த சற்று நேரத்தில் பானு கயல்விழி மல்லிகா என மூவருமாக வந்து சேர்ந்தனர்.
கயல்விழியைக் கண்டதும் மாமாவும் சகுந்தலாவும் மிகுந்த மரியாதையுடன் வரவேற்க அதே சமயம் மல்லிகாவைக் கண்டதும் மாமா பேரதிர்ச்சியில் உறைந்தவராய், "மல்லி...." சொல்லி அனிச்சையாய் அவளை நோக்கி நடக்க
அதே அதிர்ச்சியுடன் ஷீலா, "அக்கா." துரிதமாக ஓடினார். மாமாவும் மல்லிகா அத்தையும் கட்டியணைத்து அழுது ஓய நீண்ட நேரம் புரண்டோடியது. பலரும் பலவிதமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்திப் பல வித கேள்விக் கணைகளைத் தொடுத்து ஓய்ந்தனர்.
இதுவரை சகுந்தலாவும் மல்லிகாவின் வருகையில் மகிழ்ச்சியுற்றதாகவே வெளிப்படுத்தினாலும் முதல் முறையாக அவர் மனக்கசப்பு வெளிப்பட்டது பானுவின் உறவை அறிந்ததும். அதாவது மல்லிகா பானு தனக்கும் ஜமீன் மாமாவுக்கும் பிறந்த மகள் என்ற உண்மையை வெளிப்படுத்தியதும் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ஆனால் சகுந்தலா, "அடியே நீ எங்களை விட்டுப் பிரிந்து போனப்போ ஒருத்தியாகத்தானே போன ஒண்ணும் முழுவாமா (கர்ப்பமாக) இல்லையே!! யாரை ஏமாத்துறே எவன் கூடயோ படுத்து இவளை பெத்து அதை இவன் தலையில்."
ஆத்திரத்தின் உச்சத்தில் வெகுண்டு எழுந்த மாமா சகுந்தலாவை அடிக்கக் கை ஓங்கிய படி, "ஏய் பொறுக்கி நாயே." மற்றவர்கள் இரு பக்கமாக அவர் கைகளைப் பிடித்துத் தடுத்தனர். அத்தனை பேரையும் திமிறிக்கொண்டு பாய்ந்தவர் தன் வலது காலால் எட்டி உதைத்தார்.
பலத்த உதை வாங்கிய சகுந்தலா நிலைகுலைந்து பக்கத்திலிருந்த பெரிய மேஜையில் மோதி அடிபட்டுத் தரையில் சரிந்தார். அதே கோபத்துடன் கை ஓங்கிப் பாய்ந்தாள் பானு அதற்குள் மற்றவர்கள் தடுத்து நிறுத்தனர்.
வருத்தத்துடன் என்னை அணுகிய மல்லிகா தம்பி உன் உதவிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியவில்லை. ஆனால் உன் அளவுக்கு எங்களுக்கெல்லாம் பொறுமை இல்லை. என் சித்தி இப்படி ஒரு சொல்லை சொல்லும்னு நான் கனவில் கூட நினைக்கவில்லை; என் மனம் தாங்கல்ல."
நான் அவரை ஆதரவாக அணைத்த வண்ணம் அருகிலிருந்த அறையை நோக்கி அழைத்த வண்ணம் மாமாவையும் உடன் அழைத்து, "மாமா அவுங்களுக்கு நீங்க தான் ஆறுதல் சொல்லனும் என அவர்கள் இருவரையும் அந்த அறையில் விட்டு வெளிவந்து அந்த அறைக்கதவை வெளிப்புறமாகத் தாளிட
பானு, "ஏய் ஏண்டா வெளிப்பக்கம் தாழ்போடுற?"
நான் என் நையாண்டித்தனத்தை வெளிப்படுத்தி, "ம்ம்ம் இது அவுங்களுக்கு முதலிரவு." சொன்னதும் அனைவரும் சிரித்தாலும் ஏன் நான் அப்படிச் செய்தேனென ஆவலோடு என் பதிலை எதிர்பார்க்கக் குறிப்பாகக் கயல், "அடுத்து ஏதோ தயார் செய்யுற போலிருக்கே!." ஆமெனப் புன்னகைத்த படி பதிலளித்து சகுந்தலாவை நோக்கி, "நீங்க மல்லிகா அத்தையை இப்படித் தலைமறைவாகப் போகச் சொன்னது உண்மையா?"
சகுந்தலா, "ஏய் அதெல்லாம் கேட்க நீ யாருடா; முதல்ல என் வீட்டை விட்டு வெளியே போ; (தன் மகனை நோக்கி) ஏய் நீ ஏண்டா குத்துக் கல்லாட்டம் நிற்கிற; இவுங்களையெல்லாம் வெளியே அனுப்பு; ஜானூண்டு இருந்துகிட்டு கட்டப்பஞ்சாயத்து நடத்துற மாதிரி என்னைக் கேள்வி கேக்குதுங்க."
அதற்குள் கோபத்தில் பொங்கி எழுந்த ஷீலா, "நாங்க ஒண்ணும் உன் வீட்டு விருந்துக்கு வரலை; இவ்ளோ நடந்த பிறகும் நாங்க இங்க இருக்கிறதுக்கு நீ தான் நன்றி சொல்லனும்."
தன் தம்பியை நோக்கி, "டேய் கூருகெட்டவனே!! இவ்ளோ நேரம் எப்படிச் சூடு சொரனை இல்லாமல் இருந்தியோ அப்படியே சும்மா இருந்தால் உனக்கு மரியாதை; இல்லை அது (தன் அம்மாவைச் சுட்டி) பேச்சைக் கேட்டு ஏதாவது ஆடின அவ்ளோதான் நான் சும்மா இருக்க மாட்டேன்."
சகுந்தலாவை நோக்கி நான், "அம்மா நீங்க இந்தச் சூழ்நிலையைப் புரிஞ்சிக்காமல் இப்படிச் சொல்லுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவில்லை. இவ்ளோ நடந்த பிறகும் எங்களைக் குறைத்து எடை போடுகிறது என்னால நம்பவே முடியவில்லை.
இப்படி யார் கண்ணிலேயும் படாமல் 25 வருடங்களாக மறைந்து வாழ்ந்த உங்கள் அக்கா பொன்னு மல்லிகாவைக் கண்டுபிடித்த நாங்க இன்னும் எதை எதையெல்லாம் கண்டுபிடித்தோம்னு பயப்பட வேண்டிய நீங்க; இப்படி எங்களை விரட்டுகிறது உங்கள் அறிவாளித் தனத்துக்கு உகந்ததல்ல."
சகுந்தலா, "என்ன என்னை மிரட்டுறியா? நீ என்ன கிழிக்கிறாயோ கிழி; முதல்ல இந்த வீட்டை விட்டு வெளியே போ!!" இந்தச் சொற்களைக் கேட்டதும் ஷீலா கொதித்தெழ அவர்களைக் கயல்விழி சமாதானப்படுத்தினார்.
சற்றே குழம்பிய நான் இதென்ன இப்படி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் அளவுக்கு அறிவில்லாதவளா இத்தனை கொலைகளைச் செய்து முடித்தாள். அப்படியானால் அதில் சிக்கிப் பலியானவர்களின் மெத்தனப்போக்கே காரணமென முடிவுக்கு வந்து சரி நாம் இதற்கு மேலும் நீட்டிக்க வேண்டியதில்லை எனத் தீர்மானித்தேன்.
கயல்விழியை நோக்கி, "இதற்கு மேலும் தாமதிக்க அவசியமில்லை அந்த ஓட்டுநரை உள்ளே வரச்சொல்லுங்கள் (பானு, சியாமளா, சாந்தினி மூவரையும் நோக்கி) உங்கள் அப்பா அந்த அறையை விட்டு வெளிவராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு."
சோமன் உள்ளே நுழைந்ததும், "ஏமி சகுந்தலா தேவிகாரு பாக உன்னாரா?" அவனைக் கண்டதும் திடுக்கிட்ட சகுந்தலா அப்போதுதான் சற்றே உணர்ந்தவளாகச் சிறிது பயந்து பின்னர் வெளிக்காட்டாமல் மௌனமானார்.
அதே சமயம் மாமா அறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்து விட்டுப் பேச ஆரம்பித்தோம். மாமா தான் பொறுமையாக இருக்க முடியுமென மிக ஆழ்ந்த மனதோடு வாக்குறுதி அளித்தவாறு வெளியில் விடச் சொல்லி வற்புறுத்தினார்.
அதே சமயம் மல்லிகா அத்தை அவரை மிகுந்த ஆதரவுடன் சிறிது நேரம் என் பேச்சைக் கேட்கும் படி மிகத்தீவிரமாக வேண்டுகோள் விடுக்க மாமாவும் சம்மதித்து அமைதியானார். சோமன் முழு உண்மையை விளக்க மாமா மற்றும் முதல் முறையாக முழு உண்மையை அறிந்து கொண்ட அனைவரும் கோபத்தில் கொதித்தெழுந்தனர்.
ஒரு கட்டத்தில் கோபத்தை அடக்க முடியாமல் பானுவும் சாந்தினியும் தன் பாட்டி சகுந்தலாவைத் தாக்க முற்பட்டனர்; நாங்கள் அவர்களைக் கட்டுப்படுத்திச் சமாதானப்படுத்தினோம்.
எல்லா உண்மைகளையும் அறிந்த பின்னர் நீண்ட நேரச் சமாதானப் படுத்தும் போராட்டத்திற்குப் பின் மாமா பொறுமை கடைப்பிடிக்க உறுதி அளித்தபின் அனைவரும் ஒன்று கூடி உரையாடி முடிவெடுக்க ஆரம்பித்தோம்.
சாந்தினி கர்ப்பமில்லை இது எங்கள் நாடகத்தின் ஒரு பகுதி என விளக்கினோம். அடுத்துச் சோமனைக் காவலாளியிடம் ஒப்படைக்க அதே சமயம் சகுந்தலாவையும் ஒப்படைக்கக் கிட்டத்தட்ட அனைவரும் துரிதப்படுத்த நான் சற்று பொறுக்கும் படி வேண்டுகோள் விடுத்தேன்.
இறுதியாக ஒரு முயற்சியாக மாமா, மல்லிகா, ஷீலா, நான், சகுந்தலா என ஐவர் மட்டும் தனியாகப் பேசி முடிவெடுக்க ஆலோசனை கூற மாமாவோ தன்னால் முடியாதெனக் கோபப்பட மீண்டும் மல்லிகா அத்தையின் கனிவான வேண்டுகோளுக்கு இணங்கி கலந்து கொண்டார். மற்ற அனைவருக்கும் என் செயலில் வியப்புக் குழப்பமெனப் பல வித உணர்ச்சிகளுடன் வழியனுப்ப நாங்கள் தொடர்ந்தோம்.
நான், "மாமா நீங்கக் கொஞ்சம் பொறுமையாக உங்கள் அக்காவோட சின்ன வயசில் விளையாடிப் பழகின கால கட்டத்தை நினைவு படுத்திக்கோங்க (சொல்லி சகுந்தலாவை நோக்கி) அம்மா உங்களைத் தண்டித்து எந்தப் பலனும் அடையப் போவதில்லை அதைவிட உங்கள் கோபத்துக்குக்கான காரணம் புரிந்தால் அதற்கு ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிக்கலாம்.
முக்கியமா உங்கள் மகள், மகன் இருவருக்கும் நீங்க விட்டுவிட்டுப் போகிற சொத்து 'ஒரு கொலைகாரியின் பிள்ளைகள்' என்ற அவப்பெயர்தானா? இல்லை அதுக்கு ஏதாவது செய்து அதன் தாக்கத்தைக் குறைக்க முயற்சி செய்வீர்களா?" அவரிடம் எந்தப் பதிலும் இல்லை முகத்தில் தோல்வியின் மன வருத்தம் ஏமாற்றம் என உணர்ச்சிகளைத்தவிர வேறேதும் வெளிப்படவில்லை.
தனு, "அதுதான் அந்தத்தம்பி கேட்கிறதில்ல பதில் சொல்கிறதுக்கென்ன வாயில கொழுக்கட்டையா வைத்திருக்க?"
நான், "ப்லீஸ்! மாமா எனக்கு உங்கள் உதவி தேவை."
தனு, "அட என்னப்பா நான் என் உயிரையும்."
குறுக்கிட்ட நான், "அதைவிட ரொம்ப முக்கியம் உங்கள் பொறுமை; உங்கள் அக்கா மேல் இருந்த பழைய பாசம்."
தனு, "அதெப்படி முடியும் ரகு."
தொடரும்